தோனி மற்றும் ரோகித்தின் கேப்டன்ஷிப்பை ஒப்பிடும் பார்த்தீவ் படேல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 18 Feb 2022 10:14 AM GMT (Updated: 18 Feb 2022 10:14 AM GMT)

தோனி மற்றும் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப்பை பார்த்தீவ் படேல் ஒப்பிடுகிறார்.

மும்பை,

இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் பார்த்தீவ் படேல். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், பின்னர் மும்பை அணிக்காகவும் விளையாடினார்.

டோனி தலைமையில் கீழும், ரோகித் சர்மாவின் தலைமையில் கீழும் விளையாடிய அனுபவம் அவருக்கு உண்டு. இந்த நிலையில், டோனி மற்றும் ரோகித் இருவரின் கேப்டன்ஷிப் குறித்து பார்த்தீவ் கூறும்போது, 

"நான் சென்னை மற்றும் மும்பை அணிக்காக தோனி மற்றும் ரோஹித்தின் கீழ் விளையாடியுள்ளேன். ஒரு வீரருக்கு அணியில் ஆதரவு கிடைத்தால், அவரால் சிறப்பாக செயல்பட முடியும். இந்த பண்பினை டோனி கொண்டிருந்தார். அவர் சக வீரர்களுக்கு ஊக்கமும் ஆதரவும் அளித்தார். இதனையே ரோகித்தும் செய்துவருகிறார். 

அணி வீரர்களுக்கு பாதுகாப்பையும் தெளிவையும் அளித்து அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கு கேப்டனுக்கு முக்கிய பங்கு உள்ளது. ரோகித்திடம் இந்த குணங்கள் உள்ளன.

ஐபிஎல்-லின் அனைத்து சீசன்களிலும் சென்னை அணி சிறப்பாக விளையாடி வருகிறது. ஏனென்றால் சென்னை அணி தங்கள் வீரர்களை அடிக்கடி மாற்ற விரும்புவதில்லை. மும்பை அணியும் இதேபோன்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளது". இவ்வாறு பார்த்தீவ் படேல் கூறினார்.


Next Story