சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர்; ஒடிசா மற்றும் சர்வீசஸ் அணிகள் அபார வெற்றி!


சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர்; ஒடிசா மற்றும் சர்வீசஸ் அணிகள் அபார வெற்றி!
x
தினத்தந்தி 20 April 2022 9:12 AM GMT (Updated: 20 April 2022 9:32 AM GMT)

நடப்பு சாம்பியனான சர்வீசஸ் அணி, குஜராத்தை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பெற்றுள்ளது.

திருவனந்தபுரம்,

75-வது தேசிய அளவிலான சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள், கேரள மாநிலம் மலப்புரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடரில், மலப்புரம் கொட்டப்பாடி மைதானத்தில்  நேற்று நடைபெற்ற குரூப்-பி பிரிவு ஆட்டத்தில், குஜராத்-சர்வீசஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. 

இந்த  ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சர்வீசஸ் அணி, 3-1 என்ற கோல் கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. இதன் மூலம், தனது முதல் வெற்றியை பெற்றுள்ளது.

மற்றொரு குரூப்-பி பிரிவு ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் மணிப்பூர் அணியை வீழ்த்தி ஒடிசா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.


Next Story