அமைதி திரும்ப வேண்டும் - ரஷிய டென்னிஸ் வீரர் டேனில் மெட்வெடேவ்!!


அமைதி திரும்ப வேண்டும் - ரஷிய டென்னிஸ் வீரர் டேனில் மெட்வெடேவ்!!
x
தினத்தந்தி 10 March 2022 9:36 AM GMT (Updated: 10 March 2022 9:36 AM GMT)

ரஷியாவை சேர்ந்த டேனில் மெட்வெடேவ் மற்றும் பெலாரசியன் அரினா சபலெங்கா அமைதி திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலிபோர்னியா,

ரஷியாவை சேர்ந்த டேனில் மெட்வெடேவ் மற்றும் பெலாரசியன் அரினா சபலெங்கா அமைதி திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

டென்னிஸ் தரவரிசையில் நம்பர் 1 வீரராக உள்ள டேனில் மெட்வடேவ் தெற்கு கலிபோர்னியாவில் நடைபெறும் ஏடிபி இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், அவர் கூறியதாவது, “உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். இதுவே அனைத்து டென்னிஸ் வீரர்களின் கருத்தாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

அதேபோல முன்னாள் நம்பர் 1 வீராங்கனை மரியா ஷரபோவா மற்றும் ஆன்டி முர்ரே ஆகியோர் போரால் பாதிக்கப்ப்ட்ட குழந்தைகளுக்கு நிதி திரட்ட உறுதியளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story