இளம்பெண் மாயம்

புதுவை ரெட்டியார்பாளைம் அருகே வீட்டிலிருந்த இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் மாயம்
Published on

புதுச்சேரி

புதுவை ரெட்டியார்பாளைம் புதுநகர் 1-வது குறுக்குத்தெருவை சேந்தவர் பாலாஜி. இவரது மகள் திவ்யா (வயது 24). இவர் 10-ம் வகுப்புவரை படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். சம்பவத்தன்று அவரது தாய் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். மாலை வேலை முடித்து வீட்டிற்கு வந்து பார்த்த போது மகள் திவ்யாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்தினர், உறவினர் வீடுகளில் மாணவியை தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com