தொடர் சரிவை சந்திக்கும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்
தொடர் சரிவை சந்திக்கும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
Published on

மும்பை,

இந்திய பங்குச்சந்தை கடந்த 2ம் தேதி முதல் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி, இந்திய பங்குச்சந்தை இன்று (21.01.2026 - புதன்கிழமை) சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 75 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 157 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 603 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 58 ஆயிரத்து 800 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதேபோல், 237 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 963 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 270 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 909 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

152 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 155 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 626 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 270 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com