அரண்மனை-3

ஆர்யாவுடன் சுந்தர் சி. நடித்து இயக்கும் `அரண்மனை-3’ சுந்தர் சி. டைரக்டு செய்த `அரண்மனை,’ `அரண்மனை-2’ ஆகிய 2 படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதைத்தொடர்ந்து அதன் மூன்றாம் பாகமாக, `அரண்மனை-3’ என்ற புதிய படம் தயாராகிறது.
அரண்மனை-3
Published on

இதில் ஆர்யா, சுந்தர் சி, ராஷிகன்னா, ஆண்ட்ரியா, விவேக், யோகிபாபு, சம்பத்குமார், நந்தினி, விச்சு, மனோபாலா, சாக்சி அகர்வால் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

சத்யா இசையமைக்கிறார். யு.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். குஜராத் அருகே ராஜ்கோட் என்ற இடத்தில், வான்கெனர் பேலஸ் என்ற அரண்மனையில் படப்பிடிப்பு தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது. அங்கு 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.

`அரண்மனை-3' படத்தில் மீண்டும் பேயாக நடிக்கிறார் ஆண்ட்ரியா!

கவர்ச்சி கதாநாயகியான ஆண்ட்ரியா, 1986-ம் ஆண்டில், அரக்கோணத்தில் பிறந்தவர். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு அவர் நாடக நடிகையாக இருந்தார். `பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் அவர், சரத்குமாரின் மனைவியாக நடித்து இருந்தார். `ஆயிரத்தில் ஒருவன்,' `மங்காத்தா' உள்பட பல படங்களில், முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்தார்.

சுந்தர் சி. டைரக்டு செய்த `அரண்மனை-2' படத்தில், பேயாக நடித்தார். இப்போது சுந்தர் சி. `அரண்மனை-3' படத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த படத்திலும் ஆண்ட்ரியா பேய் வேடத்தில் நடிக்கிறார்.

மலையாள பட உலகிலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. சம்பள விஷயத்தில் விட்டுக் கொடுக்கும் சுபாவம் என்பதால், மலையாள பட வாய்ப்புகள் இவரை தேடி வருகின்றன. மற்ற கதாநாயகி களுடன் ஒப்பிடும்போது, ஆண்ட்ரியாவின் `மார்க்கெட்' அந்தஸ்து மலையாள பட உலகில் படத்துக்கு படம் உயர்ந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com