மராட்டியத்தில் அவசர பயணங்களுக்கு மீண்டும் இ - பாஸ் முறை அறிமுகம்

மராட்டிய மாநிலத்தில் அவசர பயணங்களுக்கு இ-பாஸ் முறை மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் அவசர பயணங்களுக்கு மீண்டும் இ - பாஸ் முறை அறிமுகம்
Published on

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. இதனால், மாநிலத்தில் முழு ஊரடங்குக்கு நிகரான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி அலுவலகங்கள் பணியாளாகளின் எண்ணிக்கை, திருமண நிகழ்ச்சிகள், பயணங்களுக்கு வரம்பு விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த மாநிலத்தில் அவசர பயணங்களுக்கு மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடையே பயணிப்பதற்கு இ-பாஸ் முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் மிகவும் அவசர காலங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டும்.

இதற்காக இணையவழியில் தேவையான ஆவணங்களை பொதுமக்கள் சமாப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது மராட்டியத்தில் இ பாஸ் முறை அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com