மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,948 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,948 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,948 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3,948 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,93,524 ஆக அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 54 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 7,122 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 35,953 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 3,50,449 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com