

கவுகாத்தி,
அசாமில், ஐக்கிய போடோலாந்து விடுதலை முன்னணி என்ற புதிய பயங்கரவாத இயக்கம் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. போடோ இனத்தினருக்கு தனி மாநிலம் அமைப்பதே தங்களது லட்சியம் என்று அந்த இயக்கம் அறிவித்தது.
இந்தநிலையில், அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த புதிய பயங்கரவாத இயக்கத்தினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது.
இதில், 2 பயங்கரவாதிகள் பலியானார்கள். பயங்கரவாத முகாமை பாதுகாப்பு படையினர் அழித்தனர். துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.