உத்தரபிரதேசத்தில் 6 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது

கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களும் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
உத்தரபிரதேசத்தில் 6 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமி தனது வீட்டுக்கு அருகே 2 சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது 2 சிறுவர்களும் திடீரென அந்த சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு தூக்கி சென்றனர்.

பின்னர் சிறுவர்கள் 2 பேரும் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். வீடு திரும்பிய சிறுமி தனது தாயிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 10 மற்றும் 12 வயதான இரண்டு சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். முன்னதாக சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் பலாத்காரம் உறுதி செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சிறுவர்கள், சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் தற்போது ரிமாண்ட் ஹோமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com