

புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி, கடந்த ஜனவரி 31-ந் தேதி முதல் பிப்ரவரி 11-ந் தேதிவரை நடந்தது. 2-வது பகுதி, மார்ச் 14-ந் தேதி தொடங்கியது.
இந்த கூட்டத்தொடர், நாளை (வெள்ளிக்கிழமை) முடிவடைவதாக இருந்தது. ஆனால், ஒருநாள் முன்னதாக, இன்று (வியாழக்கிழமை) முடித்துக் கொள்ளப்படுகிறது. இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் இன்று ஒத்திவைக்கப்படும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.