மாம்பழம் அனுப்பி வைத்த வங்காளதேச பிரதமருக்கு அன்னாசி பழம் பரிசு: திரிபுரா முதல்-மந்திரி

பிரதமர் மோடி மற்றும் வங்காளதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள மேற்கு வங்காளம், திரிபுரா, அசாம், மேகாலயா, மிசோரம் ஆகிய மாநிலங்களின் முதல்-மந்திரிகளுக்கு வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா மொத்தம் 2 ஆயிரத்து 600 கிலோ மாம்பழங்களை அனுப்பி வைத்தார்.
மாம்பழம் அனுப்பி வைத்த வங்காளதேச பிரதமருக்கு அன்னாசி பழம் பரிசு: திரிபுரா முதல்-மந்திரி
Published on

திரிபுரா மாநில முதல்-மந்திரி பிப்லப் குமார் தேவுக்கான 300 கிலோ மாம்பழங்களை அகர்தலாவில் வங்காளதேச துணை தூதர் முகமது ஜோபாயத் ஹாசன் நேரில் ஒப்படைத்தார்.அதை பெற்றுக்கொண்ட பிப்லப் குமார் தேவ், பதிலுக்கு ஷேக் ஹசீனாவுக்கு திரிபுராவில் விளையும் புகழ்பெற்ற குயின் ரக அன்னாசி பழங்களை அனுப்பி வைக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com