மாநிலங்களவை எம்.பி.யாக பிப்லவ் குமார் பதவியேற்பு

மாநிலங்களவை எம்.பி.யாக பிப்லவ் குமார் நேற்று பதவியேற்றார்.
மாநிலங்களவை எம்.பி.யாக பிப்லவ் குமார் பதவியேற்பு
Published on

புதுடெல்லி,

திரிபுராவில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக இருந்து வந்த மாணிக் சாஹா கடந்த மே மாதம் அம்மாநில முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

அதை தொடர்ந்து அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான அந்த இடத்துக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட திரிபுராவின் முன்னாள் முதல்-மந்திரி பிப்லவ் குமார் தேவ் வெற்றிப்பெற்றார்.

இந்த நிலையில் தேர்தலில் வெற்றிபெற்ற பிப்லவ் குமார் தேவ் நேற்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்டார். அதேபோல் ஜம்மு-காஷ்மீரில் இருந்து பா.ஜ.க. சார்பில் நியமன எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட குலாம் அலி கட்டானாவும் எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்டார். இருவருக்கும் மாநிலங்களவை அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜகதீப் தன்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com