உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்பு
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் சில்க்யாராவில் அமைக்கப்படும் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில், அதனுள்ளே பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி 17-வது நாளாக நடைபெற்றது. தற்போது இடிபாடுகளை அகற்றும் பணி முடிந்து உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் ஒவ்வொருவராக மீட்கப்படுகின்றனர்.