வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு 25 பிளாட்களை கொடுத்தார் விவேக் ஓபராய்

மராட்டிய மாநிலம் தானேவில் நடிகர் விவேக் ஓபராய் வீரமரணம் அடைந்த 25 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்திற்கு பிளாட்கள் வழங்கி உள்ளார்.
வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு 25 பிளாட்களை கொடுத்தார் விவேக் ஓபராய்
Published on

மும்பை,

விவேக் ஓபராயின் நிறுவனமான கர்ம் இன்ப்ராஸ்டக்சர் பிரைவேட் லிமிடெட், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த ஆப்ரேஷன்களில் வீரமரணம் அடைந்த 25 சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்திற்கு பிளாட் வழங்கப்படுவது தொடர்பாக கடிதம் எழுதி உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. 4 பிளாட்கள் ஏற்கனவே உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள பிளாட்கள் விரைவில் பயனாளர்களிடம் கொடுக்கப்படும். முன்னதாக இந்தி நடிகர் அக்ஷய் குமார் உயிர்நீத்த 12 வீரர்களின் குடும்பத்திற்கு ரூ. 1.08 கோடி வழங்கியிருந்தார்.

கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தாரும் பயனாளர் பட்டியலில் அடங்குவார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com