சிறுவர்களுக்கான ஸ்மார்ட் கடிகாரம்

போட் நிறுவனம் சிறுவர்களுக்கான வான்டெரர் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
சிறுவர்களுக்கான ஸ்மார்ட் கடிகாரம்
Published on

2 மெகா பிக்ஸெல் கேமரா, உள்ளீடாக ஜி.பி.எஸ்., 1.4 அங்குல தொடு திரை உள்ளது. கேமரா உள்ளதால் குடும்பத்தினருடன் வீடியோ அழைப்புகளை மேற் கொள்ள முடியும்.

இதில் அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கான அவசர கால பொத்தான் உள்ளது. ஏதேனும் பிரச்சினையை எதிர்கொள்ளும் போது பெற்றோருக்கு உடனடியாக தெரிவிக்க இந்த பொத்தானை அழுத்தினால் போதும். ஜி.பி.எஸ். உள்ளதால் சிறுவர்களின் இடத்தை எளிதாகக் கண்டு பிடித்து பெற்றோர்கள் அந்த இடத்துக்கு விரைவாக சென்றுவிட முடியும். இதில் உள்ள பேட்டரி 2 நாட்கள் வரை செயல்படும்.

இளம் சிவப்பு, நீலம் உள்ளிட்ட நிறங்களில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.5,000.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com