தனுஷ்கோடிக்கு அகதிகளாக மேலும் 7 இலங்கை தமிழர்கள் வருகை

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 7 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்தடைந்தனர்.
தனுஷ்கோடிக்கு அகதிகளாக மேலும் 7 இலங்கை தமிழர்கள் வருகை
Published on

ராமநாதபுரம்,

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அந்நாட்டு அரசை அங்கு மக்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே இலங்கையில் இருந்து கடந்த மார்ச் மாதம் முதல் 116 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர். இந்த நிலையில் இலங்கை யாழ்பாணம் மற்றும் திரிகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி அருகே உள்ள அரிச்சல்முனை 5-வது மணல் திட்டு பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

விசாரணைக்குப் பிறகு 7 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்திற்கு வந்த இலங்கை அகதிகளின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com