கோவில்களின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு

கோவில்களின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டுபோனது.
கோவில்களின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு
Published on

வையம்பட்டி:

திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த நடுப்பட்டியில் காளியம்மன், மாரியம்மன் மற்றும் முருகன் கோவில் உள்ளது. நேற்று இந்த கோவில்களின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன், அங்கிருந்த உண்டியல்களும் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போயிருந்தது. இதைக்கண்டு ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து வையம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வையம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உண்டியலில் சுமார் ரூ.3 ஆயிரம் வரை பணம் இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com