கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டுபோனது.
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
Published on

திருச்சி பாலக்கரை கீழ கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதுரைவீரன்(வயது 46). இவர் கீழப்புதூரில் உள்ள பாலக்காட்டு பகவதிஅம்மன் கோவில் நிர்வாகத்தில் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மீண்டும் கோவிலை திறந்து உள்ளே சென்றார். அங்கு இருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மதுரைவீரன் பாலக்கரை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com