கவர்னர் ஆர்.என்.ரவியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
கவர்னர் ஆர்.என்.ரவியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
Published on

சென்னை,

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக கூறி தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் இருவரும் அமர்ந்து பேசலாமே? என யோசனை வழங்கியது. இதையடுத்து, கவர்னர் ஆர்.என். ரவி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, நிலுவையில் உள்ள 10 மசோதாக்கள் தொடர்பாக இருவரும் கலந்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவர்னருடனான சந்திப்பின்போது, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு,ரகுபதி, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கவர்னர் ஆர்.என்.ரவி , முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையேயான இந்த சந்திப்பின்போது நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் கிடைக்குமா? என்பது குறித்த கேள்வி நிலவி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com