கிணற்றில் தவறி விழுந்து டிரைவர் பரிதாப சாவு

காவேரிப்பட்டணம் அருகே கிணற்றில் தவறி விழுந்து டிரைவர் பலியானார்.
கிணற்றில் தவறி விழுந்து டிரைவர் பரிதாப சாவு
Published on

காவேரிப்பட்டணம்

லாரி டிரைவர்

காவேரிப்பட்டணம் அருகே உள்ள சாப்பர்த்தியை சேர்ந்தவர் குமார் (வயது 36). லாரி டிரைவர். இவர் கடந்த 17-ந் தேதி அந்த பகுதியில் உள்ள கிணறு அருகில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கிணற்றில் தவறி விழுந்தார்.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க முயன்றனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குமாருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com