அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண்: அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது : சென்னை ஐகோர்ட்டு

அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு அதிகம் என கூற மனுதாரர்கள் தரப்பில் எந்த ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண்: அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது : சென்னை ஐகோர்ட்டு
Published on

சென்னை,

அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கும் தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசு, பொதுப்பிரிவினருக்கான மீதமுள்ள 50 சதவீத இடங்களுக்கு போட்டியிடும் அரசு மருத்துவர்களுக்கு, 30 சதவீதம் ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் என 2020ல் பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தனியார் மருத்துவர்கள் குருபரன், சக்திவேல் உள்ளிட்டோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணையில். கிராமப் புறங்கள், தொலைதூர பகுதிகள், மலைப் பகுதிகளில் பணியாற்றுவதை ஊக்கப்படுத்தவே ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது . அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு அதிகம் என கூற மனுதாரர்கள் தரப்பில் எந்த ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை . இது சம்பந்தமான அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனவும் சென்னை ஐகோர்ட்டு தெரிவித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com