தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 3 ஆயிரம் டன் ஜிப்சம் கழிவுகள் அகற்றம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 3 ஆயிரம் டன் ஜிப்சம் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 3 ஆயிரம் டன் ஜிப்சம் கழிவுகள் அகற்றம்
Published on

ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வலியுறுத்தி, வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது.

தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் மீதமுள்ள ஜிப்சத்தை அகற்றுவது, ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவுநீரை வெளியேறாமல் தடுப்பது, 4-வது கழிவுக்குழியில் கரை உடையாமல் தடுப்பதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது, பசுமையை பராமரிப்பது, புதர்களை அகற்றுவது ஆகிய பணிகளுக்கு அனுமதி அளித்தது.

கழிவுகளை அகற்ற அனுமதி

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்காக, தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு ஆலையில் இருந்து கழிவுகளை அகற்ற அனுமதி அளித்தனர்.

அதன்படி கடந்த 23-ந் தேதி முதல் ஜிப்சம் கழிவுகள் லாரிகள் மூலம் எடுக்கப்பட்டு பல்வேறு சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

3,047 டன் ஜிப்சம் அகற்றம்

இதுவரை ஆலையில் இருந்து 3 ஆயிரத்து 47 டன் ஜிப்சம் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன. இந்த பணிகளை உதவி கலெக்டர் தலைமையிலான குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதையொட்டி ஆலையை சுற்றிலும் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com