சிறுமியை கர்ப்பமாக்கிய மருத்துவமனை ஊழியர் கைது

கைது செய்யப்பட்ட மருத்துவமனை ஊழியர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுமியை கர்ப்பமாக்கிய மருத்துவமனை ஊழியர் கைது
Published on

கரூர்,

கரூர் மாவட்டம், தோகைமலை கீழப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன்(வயது 35). இவர் தனியார் மருத்துவமனையில் ஊழியராகவும், காயமடைந்தவர்களுக்கு அவர்கள் வீட்டுக்குச் சென்று கட்டு கட்டும் பணியை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com