பாசன நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தல்

பாசன நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடைபெற்றது.
பாசன நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தல்
Published on

விராலிமலை தாலுகா பொன்னணியாறு உப வடிநில நீர் பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் மற்றும் உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலானது கடந்த 9-ந் தேதி நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு 18 பேரும், உறுப்பினர் பதவிக்கு 53 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 2 குளங்களுக்கு தலைவர் பதவிக்கான வேட்புமனுவை அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர். மீதமுள்ள குளங்களுக்கு வேட்புமனு பரிசீலனையானது 12-ந் தேதி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலானது கொடும்பாளூர், விட்டமாபட்டி, தென்னம்பாடி, கத்தலூர், பேராம்பூர், செங்களாக்குடி, மதயானைபட்டி, குன்னத்தூர் ஆகிய 8 குளங்களுக்கு தலைவர் பதவிக்கு 20 பேரும், வேலூர், கல்குடி, ஆவூர் ஆகிய 3 குளங்களுக்கு உறுப்பினர் பதவிக்கு 11 பேரும் போட்டியிட்டனர். இதற்கான தேர்தலின் முடிவில் 8 குளங்களுக்கு தலைவரும், உறுப்பினர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பின்னர் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியருமான தெய்வநாயகி சான்றிதழ்களை வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com