திருக்குவளை அருகே 20 அடி பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்து - வாலிபர் உயிரிழப்பு

திருக்குவளை அருகே 20 அடி பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்து உள்ளார்.
திருக்குவளை அருகே 20 அடி பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்து - வாலிபர் உயிரிழப்பு
Published on

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள பிரிஞ்சுமூலை கிராமத்தை சேர்ந்தவர் ஆகாஷ். இவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் ஆலத்தம்பாடி-ஆலங்குடி வரை செல்லும் சாலை வழியாக பிரிச்சுமூலையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது புத்தூர் பகுதியில் அரிச்சந்திரா ஆற்றுக்கரை தடுப்பு சுவர் கட்டுமான பணிக்கு தோண்டப்பட்ட 20 அடி பள்ளத்தில் மோட்டார் சைக்கிளில் கவிழ்ந்தது.

இந்த விபதில் பலத்த காயம் அடைந்த ஆகாசை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com