வடகிழக்கு பருவமழை: நெல்லை, குமரியில் கன மழை பெய்யும்; இந்திய வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழையால் நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை: நெல்லை, குமரியில் கன மழை பெய்யும்; இந்திய வானிலை ஆய்வு மையம்
Published on

சென்னை,

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். வங்க கடல் பகுதிகள், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இடைஇடையே 60 கி.மீ வேகத்திலும் காற்று வீசும். மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com