மொபட் திருடிய முதியவர் கைது

பாளையங்கோட்டையில் மொபட் திருடிய முதியவர் கைது செய்யப்பட்டார்.
மொபட் திருடிய முதியவர் கைது
Published on

பாளையங்கோட்டை தியாகராஜநகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 63). இவர் தனது மொபட்டை தியாகராஜநகரில் உள்ள பள்ளிவாசல் அருகே நிறுத்தி இருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது மர்மநபர் மொபட்டை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் மேலப்பாளையம் கொடிக்குளத்தை சேர்ந்த அப்துல்காதர் (62) என்பவர் மொபட்டை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, மொபட்டை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com