ஓசூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக்கொலை

ஓசூர் அருகே உள்ள தளி பெல்லூர் கிராமத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியது.
ஓசூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக்கொலை
Published on

ஒசூர்,

ஓசூர் அருகே உள்ள தளி பெல்லூர் கிராமத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியது. நேற்று இரவு இனோவா காரில் வந்த 3 பேர் கொண்ட ரவுடிகள் கும்பல், வீட்டில் இருந்த ரியல் எஸ்டேட் அதிபர் லோகேஷை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த லோகேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, ரவுடிகள் தலைமைறைவாகியுள்ளனர்.

லோகேஷ் மனைவி உள்பட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொழில் அதிபர் லோகேஷிடம் ரவுடிகள் கும்பல் ரூ.5 லட்சம் கேட்டு தொடர்ந்து மிரட்டி வந்ததாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. கஜா, எதுபூசன் ரெட்டி உள்ளிட்ட சிலர் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com