தேனி மாவட்ட அணிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு

தேனி மாவட்டத்தில் மாநில கூடைபந்து போட்டியில் பங்கேற்க வீரர், வீராங்கனைகள் தேர்வு நாளை நடக்கிறது.
தேனி மாவட்ட அணிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு
Published on

தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் சார்பில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான மாவட்டங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி விருதுநகரில் வருகிற 16-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்க தேனி மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு நாளை (சனிக்கிழமை) காலை 8 மணியளவில் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது. 1-1-2007-க்குப் பின் பிறந்தவர்கள் இதில் பங்கேற்க தகுதியுடையவர்கள். இதில் பங்கேற்க விரும்புபவர்கள் வயதுச் சான்றுகளுடன் தேர்வு நடக்கும் நாளில் நேரில் வர வேண்டும். இத்தகவலை தேனி மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் அஸ்வின் நந்தா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com