கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்ற செந்தில் பாலாஜி

த.வெ.க. தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்ற செந்தில் பாலாஜி
Published on

கரூர்,

கரூரில் த.வெ.க. பிரசார கூட்டத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூர் மாவட்டத்தில் இருந்து வரும் தகவல்கள் கவலையளிப்பதாக முதல்-அமைசர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் மற்றும் ஏ.டி.ஜி.பி. தேவாசீர்வாதம் ஆகியோரை உடனடியாக கரூர் செல்ல முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார். அங்கு நிலவி வரும் சூழல் குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்து வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com