

சிறுவாச்சூர் மேம்பால பணிகள் குறித்து சமூக வலைத்தளங்களில் தற்போது மீம்ஸ் வெளியாகி வைரலாகி பரவி வருகிறது. அதில், நடிகர் ரஜினி நடித்த 'பாபா' திரைப்படத்தில் வருவது போல் கடவுள் ஒருவரிடம் உனக்கு என்ன வர வேண்டும் கேள் என்று கேட்பதும், அதற்கு அந்த நபர் கடவுளிடம் நான் சாகுறதுக்குள்ள சிறுவாச்சூர் மேம்பாலம் கட்டி முடிக்கனும் என்று கூறுவது போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த மீம்ஸ் சிரிப்பை ஏற்படுத்தினாலும், அரசு அதிகாரிகளின் அலட்சியத்தை வெளிக்காட்டுகிறது.