

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவான ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து உயிர்த்து எழுந்த தினமான இந்த பண்டிகையையொட்டி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு புதிய ஒளியை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு, சிறப்பு பாடல், திருப்பலி நடைபெற்றது. நேற்று காலை சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. Special Masses in Churches on the occasion of Easterஇதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.