

சென்னை,
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் பயணிகள் ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில், மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் ஜூன் 1-ம் தேதி முதல் சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் இயக்கப்பட்டுவந்த 7 சிறப்பு ரயில்களை ஜூலை 15வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.