

ராயக்கேட்டை:
ராயக்கேட்டை அருகே 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளி மாணவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கேட்டை அருகே உள்ள தூர்வாசனூர் கிராமத்தை சேர்ந்தவர் கேவிந்தராஜ் (வயது 43). விவசாயி. இவருடைய மனைவி சுனந்தா. இவர்களுக்கு சூர்யா (வயது 15) என்ற மகன் இருந்தார். இவர் ராயக்கேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நன்றாக படித்து வந்த சூர்யா கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் மகனை நன்றாக படிக்குமாறு கண்டித்ததாக தெரிகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் சூர்யா தனது தந்தையுடன் திருவாசார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வந்தார்.
தற்கொலை
இதையடுத்து மாலையில் வீட்டுக்கு வந்த அவர் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்பேட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்றிருந்த சுனந்தா மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ராயக்கோட்டை போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக கோவிந்தராஜ் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.