பள்ளி மாணவ-மாணவிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி

பள்ளி மாணவ-மாணவிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது.
பள்ளி மாணவ-மாணவிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி
Published on

பெரம்பலூரில், மாவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி நேற்று நடந்தது. இதில் 11, 14, 17, 19 ஆகிய வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஒற்றையர் பிரிவில் நடத்தப்பட்ட போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் கலந்து கொண்டு போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த வீரர்-வீராங்கனைகளுக்கு கோப்பை, பதக்கம், கேடயம், சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி பாராட்டினார். போட்டியில் அதிக புள்ளிகள் பெற்ற பள்ளிக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டிற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட மேஜை பந்து கழகத்தின் தலைவர் சரவணன், செயலாளர் ராமர், பொருளாளர் ஸ்டான்லி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com