தமிழ்நாட்டின் 35-வது கிராண்ட் மாஸ்டரானார் இளம்பரிதி


தமிழ்நாட்டின் 35-வது  கிராண்ட் மாஸ்டரானார் இளம்பரிதி
x
தினத்தந்தி 30 Oct 2025 8:18 PM IST (Updated: 30 Oct 2025 8:22 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் சாதித்ததாக உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினாவில் நடைபெற்ற பிஜெல்ஜினா ஓபன் போட்டியின் மூலம் தமிழ்நாட்டின் 35-வது மற்றும் இந்தியாவின் 90-வது கிராண்ட் மாஸ்டராக ஏ.ஆர்.இளம்பரிதி உருவெடுத்துள்ளார்.

இளம்பரிதிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும் துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்,

தமிழகத்துக்கு இந்திய சதுரங்கத்துக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் மற்றும் பெருமைக்குரிய தருணமாக இது அமைந்துள்ளது. இந்தியாவின் 90-வது கிராண்ட் மாஸ்டராரும் தமிழ்நாட்டின் 35-வது கிராண்ட் மாஸ்டருமான இளம்பரிதிக்கு வாழ்த்துகள். விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாம்பியன் மேம்பாட்டுத் திட்டத்தின் பயனாளியான இளம்பரிதி, தொடர்ந்து மேலும் பல வெற்றிகளைப் பெறவும் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார்.

1 More update

Next Story