தூத்துக்குடி: மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் பகுதியில் குடும்பத் தகராறில் மனைவி, கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டாராம்.
தூத்துக்குடி: மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் அருகில் உள்ள காட்டுநாயக்கன்பட்டி, கிழக்கு தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் முருகன் (வயது 31), கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி ராமலட்சுமி என்ற மனைவியும் மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் குடும்பத் தகராறில் மனைவி ராமலட்சுமி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டாராம்.

இதனால் மன வேதனையில் இருந்த முருகன் தனது வீட்டில் மின் இணைப்பு வயரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com