கால்நடை மருத்துவ முகாம்

கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
கால்நடை மருத்துவ முகாம்
Published on

பனவடலிசத்திரம்:

தேவர்குளம் அருகே உள்ள தடியம்பட்டி பஞ்சாயத்து சொக்கநாச்சியார்புரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை பால்வளத்துறை ஆவின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருந்துகள் அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை நடத்தியது.

கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ரோஜர், ஆவின் பொது மேலாளர் தியானேஷ் பாபு, பால்வளத்துறை துணை பதிவாளர் சைமன் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். பஞ்சாயத்து தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார். சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பேசினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com