திருச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கப்படுமா? - ஓ.பி.எஸ் சூசக பதில்

திருச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கப்படுமா? என்பது குறித்து ஓ.பி.எஸ் சூசக பதில் அளித்தார்.
திருச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கப்படுமா? - ஓ.பி.எஸ் சூசக பதில்
Published on

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

"ஏப்ரல் 24-ந் தேதி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள், அதிமுக 51 ஆம் ஆண்டு, அம்மா ஜெயலலிதாவின் பிறந்த நாள் அனைத்தையும் சேர்த்து முப்பெரும் விழாவாக திருச்சியில் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள அதிமுக தொண்டர்கள் லட்சக்கணக்கில் கலந்துகொண்டு அதிமுகவின் வலிமையை நிரூபிப்பார்கள்" என்று கூறினார்.

அதனை தொடரந்து மாநாட்டிற்கு சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கப்படுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு "மாநாட்டிற்கு கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு முறைப்படி அறிவிப்பும், அழைப்பு விடுக்கப்படும். அனைவரும் கலந்து கொள்வார்கள்" என ஓ.பி.எஸ் சூசகமாக கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com