உலக யோகா தினம்

திசையன்விளை அருகே உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
உலக யோகா தினம்
Published on

திசையன்விளை:

திசையன்விளை அருகே நவ்வலடி தட்சணமாற நாடார் சங்கத்தின் சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளியில் உலக யோகா தினம் நடந்தது. தலைமை ஆசிரியர் ராஜராஜன் தலைமை தாங்கி, யோகா பயிற்சியை தொடங்கி வைத்தார். மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.

நவ்வலடி பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த யோகா பயிற்சிக்கு பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார் தலைமை தாங்கினார். வாழும் கலை இயக்க பயிற்சியாளர் ராமநாதன் யோகா பயிற்சியை நடத்தினார். இதில் கிராம மக்கள் பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com