மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானா.
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
Published on

உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உ.நெமிலி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கணபதி(வயது 29). இவர், பாண்டூர் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரது வீட்டிற்கு கட்டிட வேலைக்காக சென்றார். அங்கு வெல்டிங் வைத்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி விழுந்த கணபதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்தபோது, கணபதி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது பற்றி அறிந்ததும் உளுந்தூர்பேட்டை போலீசார் விரைந்து சென்று கணபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com