சீனாவின் ஷாங்காய் நகரில் பாதசாரிகள் கூட்டத்திற்குள் கார் புகுந்தது: 18 பேர் காயம்

சீனாவின் ஷாங்காய் நகரில் பாதசாரிகள் கூட்டத்திற்குள் கார் புகுந்ததில் 18 பேர் காயம் அடைந்தனர்.
சீனாவின் ஷாங்காய் நகரில் பாதசாரிகள் கூட்டத்திற்குள் கார் புகுந்தது: 18 பேர் காயம்
Published on

ஷாங்காய்,

சீனாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான ஷாங்காய் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், கார் ஒன்று தாறுமாறாக ஓடி, பாதசாரிகள் கூட்டத்திற்குள் புகுந்தது. இந்த விபத்தில் 18 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக வாகனங்களை மக்கள் கூட்டத்திற்குள் செலுத்தி தாக்குதல் நடத்தும் முறையை பயங்கரவாதிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com