ஈரான்: 3 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவி சாதனை

விண்ணில் ஏவிய 3 செயற்கைகோள்கள், தகவல் தொடர்பு மற்றும் புவிசார் தொழில்நுட்பம் குறித்த பயன்பாட்டுக்கு உதவும் என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான்: 3 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவி சாதனை
Published on

ஜெருசலேம் ,

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட 3 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சொந்த தயாரிப்பான சிமோர்க் ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. ஈரான் விண்வெளி நிறுவனம் தயாரித்துள்ள இந்த செயற்கைக்கோள்கள், தகவல்தொடர்பு மற்றும் புவிசார் தொழில்நுட்பம் குறித்த பயன்பட்டுக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள் சோதனைகள் நடத்தியிருப்பதன் மூலம், ஐ.நா. பாதுகாப்பு குழுவின் தீர்மானத்தை மீறி ஈரான் செயல்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அணு ஆயுத திறன் வாய்ந்த எவ்வித பாலிஸ்டிக் ஏவுகணைகள் சோதனை முயற்சிகளையும் ஈரான் மேற்கொள்ளக் கூடாது எனவும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com