பிலிப்பைன்சில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.0 ஆக பதிவு

பிலிப்பைன்சில், கடந்த 2013-ம் ஆண்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 220-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
பிலிப்பைன்சில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.0 ஆக பதிவு
Published on

மோரோ கல்ப்,

பிலிப்பைன்சின் மோரோ கல்ப் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் இன்று தெரிவித்து உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

எரிமலை மற்றும் நிலநடுக்க தாக்கத்திற்கு பிலிப்பைன்ஸ் நாடு உள்ளாவது என்பது அதிகரித்து காணப்படுகிறது. பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அது அமைந்துள்ளது, இதற்கான காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

பிலிப்பைன்சில், கடந்த 2013-ம் ஆண்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 220-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com