ஒரே மாதத்தில் கொரோனா பாதிப்பு 52 % அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு

கொரோனாவின் புதிய வகையான ஜே.என்.1 வைரஸ் தான் தற்போது அதிகரித்து வருவதற்கு காரணமாக உள்ளது.
ஒரே மாதத்தில் கொரோனா பாதிப்பு 52 % அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு
Published on

ஜெனீவா,

உலக நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறவர்களின் எண்ணிக்கை சுமார் 3 ஆயிரம் ஆகியுள்ளது.

நாட்டிலேயே கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கேரளாவை தொடர்ந்து தமிழ்நாடு, கர்நாடகாவிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது. பெங்களூரில் மட்டும் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் புதிய வகையான ஜே.என்.1 வைரஸ் தான் தற்போது அதிகரித்து வருவதற்கு காரணமாக உள்ளது.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை கடந்த 28 நாட்கள் கால கட்டத்தோடு ஒப்பிடுகையில் 8 சதவிகிதம் குறைந்து உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com