சென்னையில் ஐ.பி.எஸ். அணிக்கு எதிரான கால்பந்து போட்டி: 3-1 என்ற கோல் கணக்கில் ஐ.ஏ.எஸ். அணி வெற்றி

3-1 என்ற கோல் கணக்கில் ஐ.பி.எஸ். அணியை வீழ்த்தி ஐ.ஏ.எஸ். அணி வெற்றி பெற்றது.
சென்னையில் ஐ.பி.எஸ். அணிக்கு எதிரான கால்பந்து போட்டி: 3-1 என்ற கோல் கணக்கில் ஐ.ஏ.எஸ். அணி வெற்றி
Published on

சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.

இதில் ஐ.ஏ.எஸ். அணிக்கு மாற்றுத்திறனாளிகள் துறையின் செயலாளர் ஆனந்த குமார் கேப்டனாகவும், ஐ.பி.எஸ். அணிக்கு சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில்குமார் சரத்கர் கேப்டனாகவும் பொறுப்பு வகித்தனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் ஐ.பி.எஸ். அணியை வீழ்த்தி ஐ.ஏ.எஸ். அணி வெற்றி பெற்றது.   

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com