மலாடை சேர்ந்த தொழில் அதிபரிடம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல்

மும்பை மலாடு பகுதியை சேர்ந்த தொழிலதிபரை மிரட்டி ரூ.20 லட்சம் கேட்ட நபர். போலீசார் விசாரணை
மலாடை சேர்ந்த தொழில் அதிபரிடம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டல்
Published on

மும்பை, 

மும்பை மலாடு பகுதியை சேர்ந்த தொழிலதிபருக்கு கடந்த 20-ந்தேதி இரவு ஒருவர் செல்போனில் அழைப்பு விடுத்தார். அதில் பேசிய ஆசாமி தாங்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர்கள் என அறிமுகப்படுத்தி கொண்டார். தங்களுக்கு உடனடியாக ரூ.20 லட்சம் தர வேண்டும் என கூறி கொலை மிரட்டல் விடுத்தார்.இந்த சம்பவம் குறித்து தொழிலதிபர் தின்தோஷி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்த ஆசாமியை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com