போரூர் மின் மயானம் 22-ந் தேதி வரை இயங்காது: சென்னை மாநகராட்சி


போரூர் மின் மயானம் 22-ந் தேதி வரை இயங்காது: சென்னை மாநகராட்சி
x
தினத்தந்தி 3 March 2022 10:05 AM GMT (Updated: 3 March 2022 10:05 AM GMT)

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை வளசரவாக்கம் மண்டலம் போரூர் மின் மயானத்தில் பராமரிப்பு பணி தொடங்கியுள்ளது. இதனால் வருகிற 22-ந் தேதி வரை போரூர் மின் மயானம் இயங்காது. மேற்கண்ட 20 நாட்களும் பொதுமக்கள், பிருந்தாவன் நகர் மயானத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story