ரெப்போ வட்டி விகிதம் உயர்வு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 4 May 2022 9:08 AM GMT (Updated: 4 May 2022 9:08 AM GMT)

ரெப்போ வட்டி விகிதம் 4.40% சதவிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி (ரெப்போ) விகிதத்தை ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றியமைத்து வருகிறது.

இதற்கிடையில், கடந்த சில மாதங்களாக ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாக நீடித்து வந்தது. 

இந்நிலையில், ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் 0.40 சதவிகிதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 4 சதவிகிதத்தில் 4.40 சதவிகிதமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பின் மூலம் வீடு, தனிநபர், வாகன கடன்களுக்கான வட்டி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

உக்ரைன் - ரஷியா போர் விளைவாக ஏற்பட்ட பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.40 சதவிகிதம் உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Next Story